Webdunia - Bharat's app for daily news and videos

Install App
கும்பம்-பலவீனம்
பேராசையும், சோம்பேறித்தனமும் கும்ப ராசிக்காரர்களின் முக்கிய பிரச்சினையாகும். நடந்து முடிந்த விஷயங்களை எண்ணி எண்ணி இவர்கள் வருந்திக் கொண்டே இருப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லிவிட்டாலும் கூட மனமுடைந்து போவார்கள். பயணம் செய்வது பிடிக்கும். ஆனால் எந்த பயணமும் நன்மையில் முடியாது. இதனால் பண நஷ்டமும், நேர விரயமுமே மிஞ்சும். தனது லட்சியம் நிறைவேற எந்த விதமான நடவடிக்கையையும் மேற்கொள்வர். தனது சுதந்திரத்திலோ, நடவடிக்கையிலோ வேறு யாரும் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். துற்குணங்களில் இருந்து விடுபட சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விரதம் இருக்கலாம் அல்லது ஏகாதசி, பிரதோஷ நாட்களில் விரதம் இருக்கலாம்.
Show comments